உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

பூமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்மேல் அண்ணா தெரு பூமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு பம்பையில் இருந்து கரகம் ஜோடித்து எடுத்து வரும் நிகழ்ச்சியும், 9:30 மணிக்கு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு கும்ப படையலும், இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !