உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 10.30 மணியளவில் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு பழங்கள், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி எழுதிய வெற்றிலைகளை யாககுண்டத்தில் கொட்டப்பட்டது. பின்னர் புடவைகள் சாற்றப்பட்டு, தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !