உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம்

அக்னி நட்சத்திரம் : அருணாசலேஸ்வரரை குளிர்விக்க தாராபிஷேகம் துவக்கம்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம்  இன்று துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நேர்அண்ணாமலையார் கோவில்,  மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது.  (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) இதில் ஏராளமான பக்தர்களக் தரிசனம் செய்தனர்.


கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி, வரும் 28வரை உள்ளது. இக்காலத்தில், வெப்பம் கடுமையாக இருக்கும். சிவன் கோவில்களில், உச்சிகால அபிஷேக பூஜை நடக்கும் நேரமான, 11:30 மணிக்கு தொடங்கி, சாயரட்சை பூஜை நடக்கும் நேரமான மாலை, 6:00 மணி வரை தாராபிஷேகம் நடக்கும். இதில், விளாமிச்சை வேர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை பொருட்களை, பன்னீரோடு கலந்து, தாரா பாத்திரத்தில் போட்டு, அதை, மூலவர் லிங்கத்தின் மீது, சொட்டு சொட்டாக விழும்படி, தாராபிஷேகம் நடக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், எல்லா ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை பெய்ய வேண்டியும், தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படும் தாராபிஷேகம், அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று தொடங்கிது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !