காளியம்மன் கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை
ADDED :1251 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சந்தனம், குங்குமம், பால்,பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் துதிப் பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் கோவில் முன்பு, கும்மி ஆட்டம் ஆடி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.