அருணாசலேஸ்வரர் கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED :1231 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று (22ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.