செலவில்லாத தர்மம்
ADDED :1367 days ago
தோழர் ஒருவர் நாயகத்திடம், “நான் தர்மம் செய்துதான் ஆக வேண்டுமா...’’ எனக்கேட்டதற்கு, ‘‘ஆமாம்’’ என்றார்.
‘‘தர்மம் செய்வதற்கு என்னிடம் பணம் இல்லையே.. என்ன செய்வது’’ என கேட்டார்.
“முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தர்மம் செய்ய நல்ல மனம் வேண்டும். துன்பப்படுபவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொண்டு செய்தால் போதும்’’ என்றார்.