பழநி மாசி திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வதால் தீச்சட்டி, உருவ விற்பனை அதிகரித்துள்ளது.
பழநி மாசி திருவிழா மாரியம்மன் கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோயிலின் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டது. அதன் பின் பக்தர்கள் திரளாக நேர்த்திக்கடன் செலுத்த துவங்கியுள்ளனர். இதில் விளக்கு ஏற்றுதல், முகம், கை,கால் போன்ற உருவங்களை படைத்தல்,தீச்சட்டி எடுத்து வழிபடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் நடைபெற்று வருகின்றன.மேலும் அருகில் உள்ள கிராம மக்கள் பெரும்பாலான பால் மற்றும் மஞ்சள் நீர் எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஆயக்குடி பகுதியில் தயாரிக்கப்பட்ட தீச்சட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ரூ.100 முதல் முதல் ரூ.500 வரை தீச்சட்டிகள் விற்பனைக்கு உள்ளன. மேலும் உருவாரங்கள் 200 முதல் விற்கப்படுகின்றன பக்தர்கள் பெரும்பாலானோர் இதை வாங்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.