உண்மையான வீரன்
ADDED :1254 days ago
* கோபத்தை கட்டுப்படுத்துபவனே உண்மையான வீரன்.
* ஆசைகளை குறைத்தால் அமைதி கூடும்.
* அநியாயத்தை கண்டால் தடுத்து நிறுத்துங்கள்.
* துன்பத்திலும் பொறுமையாக இருங்கள். அதுதான் நல்லது.
* கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை உங்களின் நற்பண்பை கெடுத்துவிடும்.
* அதிக சொத்துக்களை சேர்க்காதீர்கள்.
* கருணை உள்ளவர் இருக்குமிடம் சொர்க்கம்.
* கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
* ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம்.
* தர்மம் செய்தால் செல்வம் ஒருபோதும் அழியாது.
* தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும்.
* கஞ்சத்தனமாக இருந்தால் இறைவனின் நம்பிக்கையை இழப்பீர்கள்.
– பொன்மொழிகள்