உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி கருட சேவை

வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி கருட சேவை

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். இக் கோயிலில் வைகாசி விழாவையொட்டி மே 16 அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கி, அன்று காலை 12:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சேஷ, கருட, அனுமன் வாகனங்களை அருள்பாலித்த பெருமாள் மே 21 காலை 10:30 மணிக்கு கோயிலை அடைந்தார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. தொடர்ந்து மே 22 உற்சவ சாந்தி விழாவும், நேற்று முன்தினம் இரவு கந்தவடி உற்சவத்தையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !