வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு புதிய கதவுகள்
ADDED :1490 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காளபரமேஸ்வரி கோயில் புதுப்பிக்கப்பட்டு வரும் (வைகாசி 27) ஜூன் 10 ல் கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கோயிலுக்கு புதிய கதவுகள் கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாட்டாமங்கலத்தில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக கதவுகளை வாலாந்தூர் கொண்டு வந்தனர். ஊர்வலம் வரும் வழியில் சாலையில் தண்ணீர் தெளித்து வரவேற்றனர்.