அவர்களுக்கே அந்த கதி
ADDED :1243 days ago
புற்றுநோய், இருதய நோய் என பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். ‘‘தினமும் உன்னை வழிபட்டதற்கு கிடைத்த பரிசு இது தானா’ என உரிமையுடன் அப்போது கடவுள் மீது கோபம் எழும். நோய் என்பது அவரவர் செய்த கர்ம வினையின் பயன். முற்றும் துறந்த முனிவர்கள் கூட நோய்களால் அவதிப்பட்டுள்ளனர். ஆதிசங்கரர் வயிற்றுவலியாலும், ரமணர் புற்றுநோயாலும் சிரமப்பட்டனர். அவர்களுக்கே அந்த கதி என்றால் மனிதர்களான நாம் எம்மாத்திரம்? மனிதனுக்கு நோய் உண்டாவது சகஜம்; அதற்காக வருந்த வேண்டாம். விரைவில் நலம் பெற வேண்டும் என முறையிடுங்கள். வழிபாட்டுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.