வேடசந்தூரில் பவுர்ணமி பூஜை
ADDED :5015 days ago
வேடசந்தூர்:கரட்டுப்பட்டி முடிமலைநாதன் கோயிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கிரிவலம் நடந்தது.சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திண்டுக்கல், மதுரை, வேடசந்தூர், வெள்ளணம்பட்டி, தாசிரிபட்டி, ஆசாரிபுதூர், புதுக்கோட்டை உட்பட பல ஊர் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., கந்தசாமி, ஓய்வு பெற்ற ஆவின்மேலாளர் கலையண்பன், எல்.ஐ.சி. ஏஜண்ட் ஆனந்தன், சோழா மில் மேலாளர்கள் முத்துச்சாமி, செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானத்தை சோழா மில் குரூப்பினர் செய்திருந்தனர்