உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் துவங்கியது

இதனை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தன காப்பு மற்றும் வெண்பட்டு சாற்றப்பட்டு, மலர் சட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மாட வீதிகள் வழியாக நாடகசாலை தெரு திருவேங்கடமுடையான் சன்னதி தெப்பத்தில் ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு கோதாஸ்துதி மற்றும் சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். கடந்த 2 வருடமாக கொரோனா காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோடை வசந்த உற்சவம் நடந்த நிலையில், தற்போது வழக்கம்போல் திருவேங்கடமுடையான் சன்னதி தெப்பத்தில், ஜூன் 14 வரை பத்து நாட்கள் விழா நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னார் இங்கு எழுந்தருள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !