உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலநத்தத்தில் நாளை வளைகாப்பு திருவிழா

மேலநத்தத்தில் நாளை வளைகாப்பு திருவிழா

திருநெல்வேலி : மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள அருந்தவசு அம்மன் கோயிலில் நாளை(5ம் தேதி)  காலை வளைகாப்பு வைபவம் நடக்கிறது.மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் அருந்தவசு அம்மன் கோயில்  உள்ளது. இக் கோயிலில் நாளை(5ம் தேதி) காலை 9 மணிக்கு வளைகாப்பு திருவிழா நடக்கிறது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு  அலங்கார ஆராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கூழ் காய்ச்சும் வைபவம் நடக்கிறது. பின் அம்மனுக்கு படைக்கப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை மேலநத்தம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !