காரமடை கோவிலில் ஏகாதசி வைபவம்
ADDED :1252 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு நேற்று வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசி வைபவம் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், விஸ்வரூப தரிசனம், காலசந்தி பூஜை ஆகியவை செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தனர். வெண்பட்டு உடுத்தி, வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையில், அரங்கநாத பெருமாள் கோவிலில் வலம் வந்து ஆஸ்தானம் அடைந்தார். அதை தொடர்ந்து உச்சிகால பூஜை, சாற்றுமுறை நடந்தது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலதார்கள், அர்ச்சகர்கள், செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.