பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவ விழா
ADDED :1274 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழாவில், குதிரை வாகனத்தில் பெருமாள் அருள் பாலித்தார்.
இக்கோயிலில் வசந்த உற்சவ விழா கடந்த 3 நாட்களுக்கு முன்பு துவங்கியது. தினமும் பெருமாள் தாயாருடன் வசந்த உற்சவ மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். அப்போது பாகவதர்களின் பஜனை பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்காம் நாளான இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாளுக்கு, இரவு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. நாளை காலை தீர்த்தவாரி மண்டபத்தில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்து விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.