உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

ஆனந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

கடலுர் : கடலுார், கூத்தப்பாக்கம் ஆனந்த விநாயகர் கோவிலில் 30ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது.

கடலுார், கூத்தப்பாக்கம் வள்ளலார் நகர் ஆனந்த விநாயகர் கோவிலில் 30ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி நேற்று காலை மகா கணபதி ேஹாமம், துர்கா சுத்த ேஹாமம், ஆஞ்சநேயர் ேஹாமம், மகா அபிஷேகம் நடந்தது. மாலை மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் கோமதி நாயகம், ராஜேந்திரன், வெங்கட்ரமணி, ராஜு, சுரேஷ் பாபு, கஜேந்திர பாபு, ராமலிங்கம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !