பூஞ்சுத்தியில் 1008 கலச பூஜை
ADDED :1373 days ago
மேலூர் : பூஞ்சுத்தியில் நாகதேவதை அம்மன் உலக மக்கள் அறக்கட்டளை சார்பில் உலக நன்மை வேண்டி சர்ப சாந்தி ஹோமம் மற்றும் 1008 கலச பூஜை விழா நடந்தது.இந்து இளைஞர்கள் ஆன்மீக அறக்கட்டளையினர் தலைமை வகித்தனர். சக்ரவர்த்தி ஆச்சாரியார், ஊராட்சி தலைவர் ராமனாதன், கவுன்சிலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி பரசமயகோளரிநாத ஆதினம் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், சாது பாபு ஆச்சாரியார், இராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் அகோரசிவம் கணேச சுவாமிகள், பிள்ளையார்பட்டி நவாக்கரி சுவாமி ஆசியுரை வழங்கினார்கள். அன்னதானம் நடந்தது.