பழநி மலைக்கோயிலில் 108 சங்காபிஷேகம் யாக பூஜை
ADDED :1190 days ago
பழநி: பழநி மலைக்கோயிலில் 108 சங்காபிஷேகம் யாக பூஜை நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் நேற்று உச்சி வருடாபிஷேகம் நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. யாக பூஜையை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமண்ய குருக்கள் வேத மந்திரங்கள் ஓதி நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், கார்த்திகேயன், நாகராஜன், அசோக்குமார், செந்தில்குமார், மற்றும் அயன்மிராஸ் பண்டாரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.