வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :1385 days ago
புதுச்சேரி: வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று நடந்த திருத்தேர் வீதி உலாவில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரவணகுமார் ,திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.