உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல்நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகின்றனர்.இந்நிலையில் சனி,ஞாயிறு உள்ளிட்ட இருதினங்கள் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.இதில் ஆடி முதல் நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து நளம் குளத்தில் குளித்துவிட்டு பின்னர் சனிஸ்வரபகாவனை தரிசனம் மேற்கொண்டனர்.வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குடிநீர், பிஸ்கட்,உணவுபிரசாதம் ஆகியவை கோவில் நிர்வாகம் சிறப்பாக வழங்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி பைபாஸ்சாலை, நளம்குளம், ஹெலிப்பேட் மைதனம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !