கவனமாக இருங்கள்
ADDED :1190 days ago
தோழர் ஒருவர் யாரிடம் கவனமாக இருக்க வேண்டும் என நாயகத்திடம் கேட்டார்.
அதற்கு ஒருவருடைய பொருளை பாதுகாப்பு கருதி மற்றவரிடம் ஒப்படைத்த போது அதனை மோசம் செய்தவன், பேசும் போதே பொய் சொல்லுகிறவன், வாக்களித்த பின் நிறைவேற்றாதவன், எவரிடமாவது சண்டையிடும் போது வசைமொழி பேசுபவன் இந்த குணங்களை உடைய மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என பதில் அளித்தார் நாயகம்.