உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறப்பு

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாதம்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்படுவது வழக்கம். கோவில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, விருதுநகர் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் வளர்மதி, கோவில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். இதில் ரொக்கம் ரூ 26,57, 010ம், தங்கம் 99.500 கிராம், வெள்ளி 168 கிராம் , பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருந்தது தெரியவந்தது. இருக்கன்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !