உபயநாச்சியார்கள்
ADDED :1476 days ago
ஸ்ரீரங்கம் பெரியபெருமாளின் கருவறையில் உற்சவர் நம்பெருமாளின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி,பூமாதேவி என்று இரு பத்தினிகள் அமர்ந்தநிலையில் சேவை சாதிக்கிறார்கள். இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட உற்சவ நாட்கள் தவிரமற்ற நாட்களில் கருவறையிலேயே இருக்கிறார்கள். இவர்களுக்கு உபய நாச்சியார்கள் என்ற பெயர் வழக்கில் இருந்து வருகிறது.