உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு

குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள், மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு நுாதன வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமிகளின், 186வது குருபூஜை விழா, ஆடி அமாவாசையன்று நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்தது. இதில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது. அதன்படி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்,   தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பெண்கள்,  குழந்தை வரம் வேண்டி கோவிலிலில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று, பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்ட பிரசாதத்தை சாதுக்கள் வழங்க, அதை பெண்கள்  சேலை மடியில்  பெற்று, அங்குள்ள குளக்கரையில் வைத்து, கைகளை பின்புறம் கட்டியவாறு மண்டியிட்டு, மண்சோறு சாப்பிட்டனர். இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இங்கு வழிபாடு நடத்தி,  குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பணம், தானியம் உள்ளிட்ட போன்ற பொருட்களை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !