உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரவன்பட்டியில் ஜூலை 31 ல் தேரோட்டம்

வைரவன்பட்டியில் ஜூலை 31 ல் தேரோட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நகர வயிரவன்பட்டி வடிவுடையாம்பாள் சமேத வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு ஜூலை 31ல் தேரோட்டம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆடி மாதம் வயிரவருக்கு 11 நாட்கள் பிரமோற்ஸவம் நடைபெறும். ஜூலை 23 ல் கொடியேற்றி, சுவாமிக்கு காப்புக் கட்டி பிரமோற்ஸவம் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 9:15 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் வயிரவ சுவாமி திருவீதி வலம் வந்தார். இன்று யானை வாகனத்திலும், நாளை வெள்ளிக் குதிரை வாகனத்திலும் இரவில் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 31 ல் காலை 8:00 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளும், மாலை 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். ஆக.1ல் தீர்த்தவாரியும், ஆக. 2ல் திருக்கல்யாணத்துடன் பிரமோற்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை ஏழக பெருந்திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !