உயர்வு தரும் உண்மை
ADDED :1307 days ago
இன்றைய காலத்தில் உண்மை என்பதை பார்ப்பதே அரிதாகிவிட்டது. காரணம் இதனால் எந்தவொரு பலனும் இல்லை என்ற எண்ணம் பலருக்கும் தோன்றிவிட்டது. இது வருந்தக்கூடிய விஷயமாகும். சொல்லப்போனால் உண்மையாக இருப்பவர்கள் நிச்சயம் உயர்வார்கள்.
உதாரணமாக... குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியிடத்திற்கு செல்வது, பணி செய்யும் நிறுவனத்திற்கு நம்பகத்தன்மையுடன் செயல்படுவது, கடினமாக உழைப்பது என வாழலாம்.
யார் உண்மையாக இருக்கிறார்களோ, அவர்களை ஆண்டவர் உயர்த்துவார்.