தனித்தனி பாதைகள்
ADDED :1307 days ago
ஒரு மீனை நிலத்திலோ அல்லது ஒரு பூனையை நீரிலோ விட்டால் இறந்துவிடும். அதுபோலவே சம்பந்தம் இல்லாத விஷயத்தில், உள்ளே நுழைத்தால் நமக்கும் இந்தகதிதான் நேரும். உலகில் பிறந்த அனைவருக்கும் ஏதோவொரு திறமை கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது எல்லோருக்கும் தனித்தனி பாதைகள் உண்டு. அதை தெரிந்து கொண்டால் பயணம் இனிதாகும்.