முந்திக்கொள்ளுங்கள்
ADDED :1307 days ago
சண்டையிட்ட இருவர் வெகுநாள் கழித்து பார்த்தால் அவர்கள் பேசிக்கொள்ளலாமா என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார்.
சண்டை இட்டதில் ஒருவர் தன் சகோதரனை மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் முதலில் வணக்கம் செலுத்துவதில் முந்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது சிறந்தது. இச்செயல் குடும்ப உறவை துண்டிக்க வழிவகுக்காது என்றார்.