காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயிலில் பக்தர் நன்கொடை
ADDED :1430 days ago
சித்தூர் : ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள்( தங்கும்) வசதிக்காக விடுதியை கட்டுவதற்காக சித்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் நாயுடு என்ற பக்தர் 7 லட்சம் ரூபாய் நன்கொடையாக (காசோலையாக) கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபுவிடம் வழங்கினார் .இவர்களுக்கு முன்னதாக சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் .கோவிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.