உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உனக்கும் ஒரு காலம் வரும்

உனக்கும் ஒரு காலம் வரும்


உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

* ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்கே உன்னை அர்ப்பணி. உனக்கு ஆதரவான காலம் வரும்.
* எல்லோரும் கடவுளின் குழந்தைகள். ஆதலால் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளது.
* தியாகம் செய்தால்தான் மகத்தான செயல்களை செய்ய முடியும்.
* உன் வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான், உன் பலவீனம் நீங்குவதற்கு பரிகாரம்.
* நல்ல எண்ணம் கொண்டவர்கள் கடவுளை காணும் பாக்கியம் பெறுவர்.   
* பொறுமையோடும், உறுதியோடும் வேலை செய்வதுதான் வெற்றிக்கு உரிய ஒரே வழி.
* வாழ்க்கை என்பது போர்க்களம். எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்.
* பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.
* மனம் ஒருமுகப்பட்டால் கடினமான விஷயத்தைக்கூட எளிதாக செய்யலாம்.
* அயராது உழைத்தால் நீ விரும்பியதை அடையலாம்.
* துாய்மையும் நேர்மையும் உன்னிடம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும்.
* தைரியமாக முன்னேறிச் செல். ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும்.
* பூமி போல பொறுமை மிக்கவரை உலகம் மதிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !