உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தியில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

விநாயகர் சதுர்த்தியில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில், கருவறை அமையப் பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் இங்கு சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகின்றன. சதுர்த்தி தினமான நேற்று, உப்பூர் மோர்பண்ணை கடலில் நீராடிய பக்தர்கள், காளை வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகருடன், ஊர்வலமாக சென்று, கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். ஆர்.எஸ்.மங்கலம் கூ.கூ.விநாயகர் கோவிலில், மிளகாய் நவதானிய சங்க வியாபாரிகள் சார்பில், சதுர்த்தி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மேலச்செங்குடி விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை மற்றும் கொண்டைக் கடலைகள் வழங்கப்பட்டன. வாணியக்குடி வீர விநாயகர் கோவிலில் நடைபெற்ற, விநாயகர் சதுர்த்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !