பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய நடைபெற்ற தேன் அபிஷேகம்
ADDED :1140 days ago
தஞ்சாவூர் : திருப்புறம்பியம், சாட்சிநாத சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தனி சன்னதியில், அருள்பாலிக்கும் தேனபிஷேக பெருமான் என அழைக்கப்படும் பிரளயம் காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய விடிய தேன் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.