உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி மூலத் திருவிழா பாண்டிய ராஜாவாக குன்றத்து முருகன் புறப்பாடு

ஆவணி மூலத் திருவிழா பாண்டிய ராஜாவாக குன்றத்து முருகன் புறப்பாடு

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடக்கும் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று புறப்படாகினார் கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பணசாமிக்கு பூஜை முடிந்து உற்சவர் சுப்ரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழி நெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாளித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர்.

அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது‌ இரவு நரியை பதியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் குன்றத்து சுவாமிகள் பங்கேற்றனர். செப். 9ல் ஆடி வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணியசாமி, தெய்வானை விடை பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்.10ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பு, பூஜைகள் வழக்கம் போல் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !