மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1094 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1094 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1094 days ago
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இக்கோவிலில் ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனம், கோ தரிசனம் ஆகியவை நடந்தது. கால சந்தி பூஜை, புண்ணியாக வசனம், கலச ஆவாஹனம், பஞ்ச சுக்த ஜபம், நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத அரங்கநாத பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அரங்கநாத பெருமாள் கோவிலில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உச்ச கால பூஜை, சாற்று முறை சேவித்த பின்பு, மகா ஆரத்தியும், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார், அர்ச்சகர்கள், கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
1094 days ago
1094 days ago
1094 days ago