உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்

ஷீரடி சாய்பாபா கோவில்களில் பாலாபிஷேகம்

திருத்தணி: கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, மூலவருக்கு, காலை 8:00 மணிக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மதிய ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், உற்சவர் சாய்பாபா கோவில் வளாக உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதே போல், நகரி அருகே உள்ள சாய்பாபா கோவில்களிலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !