அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா
ADDED :1151 days ago
கமுதி: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அடைக்கலம் காத்த அம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.கடந்த ஓருமாதமாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்பு மூலவரான அடைக்கலம் காத்த அம்மனுக்கு பால்,தயிர்,மஞ்சள், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்புபூஜைகள் நடந்தது.முளைக்கட்டு திண்ணையில் இருந்து கிராமமக்கள் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகளில் சக்திகரகம், முளைப்பாரி தூக்கி சென்றனர். முளைப்பாரி ஊரணியில் கரைத்தனர் .விழாவில் கமுதி சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.