திருப்பரங்குன்றத்தில் அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம்
ADDED :1167 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணபொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது. மலைக்குப்பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து வெள்ளி கவச அலங்காரமானது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.