திருவண்ணாமலையில் மனோன்மணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED :1135 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி நான்காம் நாள் விழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.