பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்று முதல் தினசரி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை திருப்பல்லக்கு விசேஷமும், திருமஞ்சனம், ததியாராதனமும் நடந்தது. இரவு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (30ம் தேதி) காலை 11 மணியளவில் திருபல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை, விசேஷ திருமஞ்சனமும், ததியாராதனமும் நடக்கிறது. இரவு தங்கக் கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. அவனைத் தொடர்ந்து 2ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 4ம் தேதி ரதோற்சவம் நடக்கிறது. 7ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடக்கிறது.