கோவில்கள் மேம்பாடு குறித்து ஆய்வு
ADDED :1143 days ago
சென்னை:சென்னை அறநிலையத் துறை தலைமையகத்தில், ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் கீழ் முக்கிய கோவில்களில் நடந்து வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது. இதில், சமயபுரம் மாரியம்மன், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி, பழநி தண்டாயுதபாணி சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கோவில்களில் நடந்த வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.