ரிஷப வாகனத்தில் சாமுண்டீஸ்வரி அருள்பாலிப்பு
ADDED :1146 days ago
அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஐந்தாம் நாள் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் ரிஷப வாகனத்தில் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி. கொலு வழிபாடும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வை கோயில் அறக் கட்டளையினர் மற்றும் பெளர்ணமி அமாவாசை குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.