உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா

மயிலாடுதுறை அருகே மன்னம் பந்தல்  ஏவிசி தன்னாட்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்விக் கடவுளான சரஸ்வதி தாயாரை போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சரஸ்வதி பூஜை கல்லூரியின் நூலகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஏவிசி கல்வி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் கே.வெங்கடராமன் பூஜையில் கலந்து கொண்டு பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்களுக்கு புதிய கோப்புகளை வழங்கி பாராட்டினார். பின்னர் ஊழியர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி கௌரவித்தார். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மேஜர் ரவிசெல்வம், முதல்வர் நாகராஜன்,   துணை முதல்வர்(மாலை நேர கல்லூரி) டாக்டர் எம்.மதிவாணன், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குனர் செந்தில்முருகன் மற்றும் திரளான பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !