தொழில் தொடங்கும்போது சுபம், லாபம் என்று எழுதுவதன் நோக்கம் என்ன?
ADDED :1257 days ago
விநாயகரை வழிபட்டு எந்தச் செயலைத் துவங்கினாலும் தடையேதும் ஏற்படாமல் நன்றாக நடக்கும். சங்கடமான விஷயங்கள் நம்மைச்சுற்றி நிகழாமல் இருந்தால்தான் தொழிலை முழுக்கவனத்துடன் நடத்த முடியும். சுபம் என்று எழுதுவதால் விநாயகர் அருளால் சங்கடங்கள் ஏதும் ஏற்படாது. லாபம் கிடைத்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். எனவே சுபம், லாபம் என்று எழுதி தன்னம்பிக்கையுடன் தொழிலை துவங்குகிறோம்.