உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.63.65 லட்சம்

திருத்தணி கோவில் உண்டியல் வசூல் ரூ.63.65 லட்சம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை உண்டியலில் செலுத்தியுள்ளனர். அந்த வகையில், 13 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் கோவில் துணை ஆணையர் விஜயா மற்றும் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து ஊழியர்கள் எண்ணினர். இதில், 63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரூபாய் ரொக்கம், 365 கிராம் தங்கம், 5,357 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !