உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி பக்தர்கள் பரவசம்

சோமனூரில் ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி பக்தர்கள் பரவசம்

சோமனூர்: சோமனூரில், பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நடந்த ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பூர் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், சோமனூர் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், 12 ஜோதிர் லிங்கங்கள் மற்றும் அமர்நாத் பனி லிங்க தரிசன நிகழ்ச்சி கடந்த, 12 ம்தேதி துவங்கியது. அமர்நாத் பனி லிங்கம், சோமநாதர், கேதாரநாதர், ராமேஸ்வரர் உள்ளிட்ட, 12 ஜோதிர் லிங்கங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பள்ளி மாணவர்களுக்கு. தியானம் மற்றும் மன அமைதிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில், கைலாயத்தில், தம்பதி சமேதராக, பிரம்மா, விஷ்ணு, சிவ பெருமான் அருள்பாலிக்கும் காட்சி அரங்கேறியது. சோமனூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !