உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி

சென்னை: இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி தமிழகமெங்கும் பிரதி மாதம் ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வரும் 30ம் தேதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை, நுங்கம்பாக்கத்தில் எழுந்தருளியுள்ள அகதீஸ்வரர் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், உழவாரப்பணியை செவ்வனே செய்ய இருக்கிறது. கோயிலில் பன்னிருதிருமுறை பாராயாணம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
எஸ். கணேசன்  9840 123 866
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !