மயிலம் கோவிலில் சிறப்பு வழிபாடு
மயிலம் : மயிலம் முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற நறுமண பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 1:00 மணிக்கு மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 9:00 மணிக்கு உற்சவர் மலை வலக்காட்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.