வடகாட்டுப்பட்டி சாய்பாபா கோயிலில் ஆரத்தி பூஜை
ADDED :1061 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் நான்கு கால ஆரத்தி பூஜை மற்றும் சப்பர ஊர்வலம் நடந்தது.
நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து பூஜை செய்தனர். மதியம் அன்னதானம் மற்றும் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜை நடந்தன. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலில் இருந்து பக்தர்கள் தூக்கிச் செல்ல சப்பர பவனி நடந்தது. இதில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், அதிகாரிபட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர்.