உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவக்கம்

காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவக்கம்

சூலூர்: காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது.

சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி, மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது. அதிகாலை ஐயப்பனுக்கு பால், நெய் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார மகா தீபாராதனை நடந்தது. 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரி மலைக்கு மாலை அணிந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடந்தது. மகர விளக்கு பூஜையை ஒட்டி, டிச., 4 ம்தேதி அகண்ட நாம ஜபம் நடக்கிறது. டிச., 25 ம்தேதி ஐயப்பன் அலங்கார ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !